ஜம்மு&காஷ்மீர் மாநிலம், சட்டப்பிரிவு 370 மற்றும் 35ஏ-வின் கீழ் என்னென்ன சலுகைகளைப் பெற்றிருந்தது? இந்த சட்டப்பிரிவுகள் நீக்கப்பட்ட பிறகு என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பது குறித்த ஒரு ஒப்பீடு.
சட்டப்பிரி 370 மற்றும் 35ஏ-வின் கீழ் ஜம்மு&காஷ்மீர் பெற்றிருந்த சலுகைகள்:
➤ஜம்மு&காஷ்மீர் மாநில அரசுக்கு சிறப்பு அதிகாரம்.
➤இரட்டை குடியுரிமை.
➤மாநிலத்திற்கென்று தனிக் கொடி.
➤நிதி அவசரநிலை(சட்டப்பிரிவு 360) மத்திய அரசால் பிரகடனப்படுத்த முடியாது
➤ஜம்மு&காஷ்மீரில் சிறுபான்மையினர்களான இந்து மற்றும் சீக்கியர்களுக்கு இட ஒதுக்கீடு எதுவும் கிடையாது.
➤ஜம்மு&காஷ்மீரை சாராத மற்ற மாநிலத்தவர்கள் அங்கு நிலம் மற்றும் சொத்துக்களை வாங்க முடியாது.
➤தகவல் அறியும் உரிமைச் சட்டம் கிடையாது.
➤சட்டப்பேரவையின் காலம் 6 ஆண்டுகள்.
➤ஜம்மு&காஷ்மீரைச் சேர்ந்த ஒரு பெண் வெளிமாநிலத்தவரை திருமணம் செய்தால் அவர் அம்மாநில குடியுரிமையை இழப்பார்.
➤ஜம்மு&காஷ்மீர் மாநில பஞ்சாயத்து அமைப்புகளுக்கு எந்த அதிகாரமும் கிடையாது.
➤அனைவருக்கும் கல்வி சட்டத்தின் கீழ் பயனடையமுடியாது.
சட்டப்பிரிவு 370 மற்றும் 35ஏ நீக்கப்பட்டதால் என்ன மாற்றங்கள் நிகழும்?
➤சிறப்பு அதிகாரங்கள் எதுவும் அம்மாநில அரசுக்கு கிடையாது.
➤ஒற்றைக் குடியுரிமை
➤இந்தியாவின் மூவர்ணக் கொடிதான் ஜம்மு&காஷ்மீருக்கும். தனிக்கொடி கிடையாது.
➤சட்டப்பிரிவு 360 செல்லுபடியாகும். நிதி அவசரநிலையை மத்திய அரசு பிரகடனப்படுத்தலாம்.
➤சிறுபான்மையினருக்கு 16% இடஒதுக்கீடு கிடைக்கும்.
➤ஜம்மு&காஷ்மீரை சேராத பிற மாநில மக்கள் நிலம் மற்றும் சொத்துகளை வாங்கலாம்.
➤தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் தகவல் பெறலாம்.
➤சட்டப்பேரவை காலம் மற்ற எல்லா ஆண்டுகளைப் போலவும் 5 ஆண்டுகள் தான்.
➤ஜம்மு&காஷ்மீர் குடியுரிமைப் பெற்ற பெண் மற்ற மாநிலத்தில் திருமணம் செய்தாலோ, வெளிநாட்டினரை திருமணம் செய்தாலோ இந்திய குடிமகளுக்கு கிடைக்கும் அனைத்து உரிமைகளும் கிடைக்கும்.
➤ஜம்மு&காஷ்மீர் மாநில பஞ்சாயத்து அமைப்புகளுக்கு, மற்ற இந்திய மாநிலங்களில் உள்ள பஞ்சாயத்துகளுக்கு வழங்கப்படும் அதிகாரம் வழங்கப்படும்.
➤அனைவருக்கும் கல்வி உரிமைச்சட்டத்தில் பயன்பெறலாம்.