யாழ் கச்சாயில் 31 கிலோ கேரளா கஞ்சா மீட்பு!

breaking
கொடிகாமம்  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கச்சாய் வீதியில்  இரவு மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது 31 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர். கடற்படையின் புலனாய்வு அதிகாரிகள்  இவற்றை கைப்பற்றி கொடிகாமம் பொலிஸாரிடம் ஒப்படைத்ததாகவும்  எனினும் சந்தேக நபர் குறித்த பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் அவரை கைது செய்வதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.