வவுனியா இளைஞர்கள் இருவர் நிலாவெளி கடலில் மூழ்கி பலி!

breaking
திருகோணமலையிலிருந்து நிலாவெளி கடலில் குளிக்கச்சென்ற இருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக நிலாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் குறித்த சம்பவத்தில் வவுனியாவைச் சேர்ந்த  16 மற்றும் 20 வயதுடைய இரு இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நிலாவெளி மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.