யாழில் நடந்த கொடூரமான வேள்விக் காட்சிகள்.!

breaking
வட தமிழீழம் , யாழ்ப்பாணம் சித்தன்கேணியில் சித்தன்கேணி- பண்டத்தரிப்பு வீதியிலுள்ள மொட்டையன்புலம் ஒழுங்கையிலுள்ள வைரவர் கோவிலில்  (10) பல நேற்று  கோழிகளும் வெட்டிச்சாய்க்கப்பட்டன. வைரவர் ஆலயத்தில் பூசைகள் இடம்பெற்று அருகிலுள்ள நாமகள் சனசமூக நிலையத்தின் முன்பாக இவை வெட்டிச்சாயக்கப்பட்டன. பின்னர்ஆலயத்தில் இவை ஏரம்போட்டு விற்கப்பட்டன.இதனை ஏராளமான சின்னஞ்சிறார்களும் கண்டுகளித்தனர். முதல்நாள் இரவுதுழுவதும் அந்தக்கிராமத்தையும் அயல்கிராம மாணவர்களையும் பரீட்சைக்கு படிக்கவிடாது பாரிய ஒலிப்பெட்டிகளில் மனித குலத்தினால் ஜீரணிக்கமுடியாத சத்தங்களை விடிய விடிய போட்டு மதுபோதையில் அட்டகாசம்செய்தார்கள்.இதனால் மாணவர்களும் பொதுமக்களும் கடும் மனவுளைச்சலுக்காளானார்கள்.