முல்லைத்தீவில் குடும்ப வன்முறை அதிகரித்து செல்லும் கிராமம்!

breaking
முல்லைத்தீவு - தேவிபுரம் பிரதேசத்தில் அதிகரித்துக் காணப்படுகின்ற சட்டவிரோத மதுபான உற்பத்தி, விற்பனைகள், போதைப்பொருள் என்பவற்றால் சிறுவர் துஷ்பிரயோகங்கள், குடும்ப வன்முறைகள் அதிகரித்துக் காணப்படுவதாக, கிராம மடட்ட அமைப்புக்கள் தெரிவித்துள்ளன. புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தேவிபுரம் பகுதியில், கசிப்பு உற்பத்தி விற்பனைகள் கஞ்சா பயன்பாடு என்பன அதிகளவில் காணப்படுவதுடன், இதனால் இக்கிராமத்தில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன எனச் சுட்டிக்காடடப்பட்டுள்ளது. இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளால் சிறுவர் துஷ்பிரயோகங்கள் இளவயது  கர்ப்பம் தரித்தல் இளவயதுத் திருமணங்கள், குடும்ப வன்முறைகள் என்பன அதிகரித்துக் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளன. இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள், பொலிஸார் மற்றும் இராணுவத்துடன் நெருக்கிய தொடர்புகளைக் கொண்டவர்களாகவே இருக்கின்றனர். இதனால் இவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு சம்பந்தப்படட தரப்புகள் எந்தவிதமான நடவடிக்கைகளை எடுப்பதில்லை என்றும் தெரிவித்துள்ளன.