முழு யாணையை அண்டாவுக்குள் மறைக்கும் சுமந்திரனின் பேச்சு

breaking
  தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு எவ­ருக்கும் முட்டுக்கொடுக்­க­வில்லை. ஓர்­மை­யுடன் குரல் கொடுத்து தன்­மா­னத்­துடன் தலை­நி­மிர்ந்து வாழ அடித்­த­ள­மிட்டு வரு­கின்­றது என்று தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் ஊடக பேச்­சா­ளரும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­திரன் தெரி­வித்தார். தமிழ் மக்கள் தெளி­வாக இருக்­கி­றார்கள். 36 ஆயுத குழுக்கள் இருந்த போது இருந்த ஒற்­று­மையைவிட கூடு­த­லாக தற்­போது ஒற்­றுமை இருக்­கி­றது. எங்­க­ளுக்கு இருப்­பது இரண்டு பலங்கள். ஒன்று எங்­க­ளது ஒற்­றுமை. மற்­றை­யது சர்­வ­தேசம். ஆகவே இவை இரண்­டையும் இறுகப் பற்றிப் பிடித்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் சுட்­டிக்­காட்­டினார். தமிழ் மக்­களின் கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளித்து சம­கால அர­சியல் நிலை­வரம் தொடர்­பாக விழிப்­பு­ணர்­வூட்டும் மக்கள் சந்­திப்பும் கருத்­த­ரங்கும் மட்­டக்­க­ளப்பு களு­வாஞ்­சிக்­குடி இரா­ச­மா­ணிக்கம் மண்­ட­பத்தில் நேற்று திங்­கட்­கி­ழமை இடம்­பெற்­றது. அங்கு சமர்ப்­பிக்­கப்­பட்ட சுமார் 35 இற்கு மேற்­பட்ட கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளித்து தொடர்ந்து உரை­யாற்­றி­ய­போதே அவர் இவ்­வாறு குறிப்­பிட்டார். இதன்­போது அவர் மேலும் தெரி­விக்­கையில், சில மாதங்­க­ளுக்கு முன்னர் யாழ்ப்­பா­ணத்­திலும் சாவ­கச்­சே­ரி­யிலும் இவ்­வா­றான மக்­களின் சந்­தே­கங்­களை நிவர்த்தி செய்து புரிந்­து­ணர்வை ஏற்­ப­டுத்தும் நிகழ்­வு­களை ஏற்­பாடு செய்­தி­ருந்தோம். இத்­த­கைய கருத்­த­ரங்­கு­க­ளுக்கு கட்சி ஆத­ர­வா­ளர்­களைவிட கட்­சியை விமர்­சிப்­ப­வர்­க­ளைத்தான் அழைத்­தி­ருந்தோம். ஏனென்றால் கட்­சியை விமர்­சிப்­ப­வர்­களின் கருத்தும் முக்­கியம் என்­பதால் நாம் அவ்­வாறு செய்தோம். இன்­றைய அர­சாங்­கத்­திற்கு ஆத­ர­வாகச் செயற்­பட்­டதன் மூல­மாக அடைந்­தது என்ன என்ற கேள்­வி­களே அங்கும் பர­வ­லாக எழுந்­தன. தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் ஒற்­றுமை சீர்­கு­லைந்­தி­ருந்தால் செய்யக்கூடி­ய­தாக இருந்த விட­யங்­களைக் கூட செய்­வ­தற்கு முடி­யா­தி­ருந்­தி­ருக்கும் என்­பது மக்­க­ளுக்குத் தெரியும். இந்த ஒற்­று­மை­யா­வது இருந்­தி­ருக்­கா­விட்டால் இது­வ­ரைக்கும் நாங்கள் செய்­தி­ருப்­பதைக்கூட செய்­தி­ருக்க முடி­யாமற் போயி­ருக்கும். எங்­க­ளுக்கு இருப்­பது இரண்டு பலங்கள். ஒன்று எங்­க­ளது ஒற்­றுமை. மற்­றை­யது சர்­வ­தேசம். ஆகவே இவை இரண்­டையும் இறுகப் பற்றிப் பிடித்துக்கொள்ள வேண்டும். இதனைக் கொண்­டுதான் விடிவை நோக்கி நகர முடியும். சமா­தானச் சூழ்­நி­லை­யிலே எதைச் செய்ய முடியும் எதைச் செய்ய முடி­யாது என்று வரை­யறை இருக்­கின்­றது. அதே­போன்­றுதான் ஜன­நா­யக முறை­யிலே எதைச் செய்ய முடியும் எதைச் செய்யக்கூடாது என்ற வரை­யறை இருக்­கின்­றது. தமி­ழீழ விடு­தலைப் புலிகள் மீது இப்­பொ­ழுதும் தடை இருக்­கின்­றது. நி­யா­ய­மான வேண்­டு­கோள்­களை நாங்கள் விடுக்­க­வில்லை. அவர்­க­ளுக்­கு­ரி­யதை நாங்கள் கேட்­க­வில்லை. எங்­க­ளுக்­கு­ரி­ய­தைத்தான் நாங்கள் கேட்­கின்றோம். இது நியா­ய­மா­னது. ஜன­நா­யக முறை­யிலே சர்­வ­தே­சத்தின் ஆத­ர­வையும் பெற்று அவர்­க­ளது நாட்­டிலும் இருக்கும் ஆட்சி முறை­மைகள் பற்றி அதில் நியா­ய­மா­னதைப் பற்­றித்தான் கேட்­கின்றோம். பெரும்­பான்­மை­யி­னத்­த­வர்­களை எதிர்ப்­பதைவிட அந்த சமூ­கத்­தி­லுள்ள முற்­போக்கு சக்­தி­களின் ஆத­ரவை நாங்கள் பெற்றுக் கொள்ள வேண்டும். சிங்­கள மக்கள் மத்­தி­யிலே நாங்கள் சரி­யாகப் பிர­சாரம் செய்­ய­வில்லை என்ற கருத்து பரப்­பப்­ப­டு­கி­றது. அது தவ­றா­னது. சிங்­கள மக்கள் மத்­தி­யிலே இருக்­கின்ற முற்­போக்கு சக்­தி­க­ளோடு இணைந்து நாங்கள் பணி­யாற்­றியி­ருக்­கின்றோம். சோபித தேரரின் முத­லா­வது கூட்­டத்­திலும் நாங்கள் பங்­கு­பற்றி நாட்டில் பெரும்­பான்மை மக்கள் மத்­தி­யில் எமது நியா­ய­மான விட­யங்­களை எடுத்துக் கூறு­வதில் முன்­னின்று உழைத்தோம். இணக்­கப்­பாட்டு அர­சாங்­கத்தை உரு­வாக்­கு­வதில் சோபித தேரர் எடுத்த முன்­னெ­டுப்பு மிகவும் காத்­தி­ர­மாக இருந்­தது. எமது உரிமைப் போராட்ட வர­லாற்றில் தனி­நாட்டுக் கோரிக்கை முன்­வைத்­த­போது சிங்­கள மக்கள் எதிர்த்­தார்கள். ஆனால் நியா­ய­மான அதி­காரப் பகிர்­வோடு ஆட்­சி­ய­தி­கா­ரங்களைக் கோர முடியும். இதற்கு சர்­வ­தேச ஆத­ரவும் இருக்கும். தன்­னு­டைய சட்­டங்­களை தானே அமுல்­ப­டுத்­து­கிற சுயா­தீனம் ஒரு நாட்­டுக்கு இருக்­கி­றது. 13 ஆவது திருத்­தத்­தை முழு­மை­யாக அமுல்­ப­டுத்தி அதற்கு அப்­பாலும் சென்று அர்த்­த­முள்­ள­தாக மாற்றுவேன் என்றார் மஹிந்த ராஜ­பக் ஷ. ஆனால் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்றார்.