புதுக்குடியிருப்பில் 7 அகவை சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்!

breaking
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 10 ஆம் வட்டாரத்தினை சேர்ந்த 7 அகவையுடைய அலக்ஸ் அஸ்வினி என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சுகயீனமுற்ற குறித்த சிறுமியை நேற்று(12) புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அங்கு அவர் உயிரிழந்துள்ளார்.
சியுமியின் உயிரிழப்பு தொடர்பில் உறவினர்கள் கவலை தெரிவித்துள்ளார்கள்.
குறித்த சிறுமியை புதுக்குடியிருப்பு மருத்துவமனைக்கு கொண்டுசென்றபோதும் 20 நிமிடங்களாக மருத்துவர் வருகை தரவில்லை என்றும் சிறுpக்கான முதல் உதவிஅளிக்கப்படாத காரணத்தினால்  சிறுமி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் உடனடியா அனைவருக்கும் அறிவிக்கப்பட்டும் புதுக்கடியிருப்பு மருத்துவமனை நிர்வாகத்தின்  அசண்டையீனத்தினாலே குறித்த சிறுமி உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார்கள்
சிறுமியின் உடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு மருத்துவர் கே.சுதர்சன் அவர்களின் பிரேத பரிசோதனையின் பின்னர் 13.08.19 அன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சிறுமியின் உயிரிழப்பிற்கான காரணம் கண்டறியப்படாத நிலையில்  உடற்கூற்று பாகங்கள் மேலதி ஆய்விற்காக கொழும்பிற்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் மருத்துவ அறிக்கையின் படிய சிறுமியின் உயிரிழப்பிற்கான காரணம் அறியமுடியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.