குச்சவௌியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை – இருவர் கைது

breaking
திருகோணமலை – குச்சவௌி பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். குச்சவௌி – மதுரங்குடா பகுதியில் நேற்றிரவு 8.15 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் காயமடைந்தவர் குச்சவௌி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து, அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் 40 வயதான ஒருவரே கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக குச்சவௌி வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.