தூக்கில் தொங்கியநிலையில் இளைஞனின் உடலம் மீட்பு!

breaking
விசுவமடுப்பகுதியில் தூக்கில் தொங்கியநிலையில் இளைஞனின் உடலம் மீட்பு!
முல்லைத்தீவு விசுவமடு 12 ஆம் கட்டை பத்திரகாளி வீதியில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் ஒருவரின் உடலம் 13.08.19 அன்று மீட்கப்பட்டுள்ளது.
25 அகவையுடைய குணசிங்கம் பிரதீபன் என்ற இளைஞனே அவரது வீட்டு காணியில் உள்ள மரம் ஒன்றில் கயிற்றில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளதை தொடர்ந்து
உறவினர்கள் புதுக்குடியிருப்பு பொலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்கள் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலீசார் உடலத்தினை மீட்டு முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் ஒப்படைத்துள்ளார்கள் பிரேத பரிசோதனையின் பின்னர் உலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த உயிரிழப்பு குறித்து புதுக்குடியிருப்பு பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.