மஹிந்த அணியினர் அமெரிக்காவுடன் டீல்! - ஐக்கிய தேசிய கட்சி

breaking

மஹிந்த அணியினர் அமெரிக்காவுடன் டீல் செய்துகொண்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

தெனியாய பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் சாகல ரத்னாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘டீல்களைப் பற்றி ஒவ்வொரு நாளும் கதைத்தாலும் அவ்வாறு கதைப்பவர்கள்தான் இந்த டீல்களை மேற்கொண்டுள்ளார்கள்.

மொட்டின் வேட்பாளரை அறிவிக்க முன்னரும் அவர்கள் தான் சந்திப்புக்களை மேற்கொண்டனர். நாம் இராஜதந்திர கலந்துரையாடல்களை முன்னெடுத்தோம்.

யார் டீல்களை மேற்கொள்கின்றார்கள் என்பது தொடர்பாக மக்கள் தான் இறுதி முடிவினை எடுக்க வேண்டும். மக்களை ஏமாற்ற இயலாது.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை பெயரிடுவதற்கு முறையொன்று உள்ளது. அதன்படி, கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் விரைவில் பெயரிடப்படுவார்’ என குறிப்பிட்டுள்ளார்.