உயிர்நீர்த்த மாணவர்களின் நினைவாக சுடர் ஏற்றி மலர்வணக்கம்!

breaking
சஞ்சோலை வளாகத்தில் உயிர்நீர்த்த மாணவர்களின் நினைவாக விமான குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தியுள்ளார்கள். முல்லைத்தீவு மாவட்டத்தின் செஞ்சோலை வளாகத்தில் கடந்த 14.08.2006 ஆம் ஆண்டு இலங்கைப்படையிரின் விமானத்தாக்குதலில் உயிரிழந்த 61 பாடசாலை மாணவர்களின் 13 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு இன்று நினைவிற்கொள்ளப்பட்டுள்ளது. விமான தாக்குதல் நடைபெற்ற இடத்தில் தாக்குதல் நடந்த நேரம் காலை 6.05 மணிக்கு மக்களால் சுடர் ஏற்றி மலர்தூவி வணக்கம் செலுத்தியுள்ளார்கள். அதனை தொடர்ந்து உயிரிழந்த மாணவர்கள் நினைவாக வள்ளிபுனம் முதன்மை வீதியில் இருந்து இடைக்கட்டு வீதியில் அமைக்கப்பட்ட நினைவு வளைவு திறந்து வைக்ககப்படவுள்ளது.