மற்றுமொரு இடத்தில் செஞ்சோலை வணக்க நிகழ்வு!

breaking
செஞ்சோலை வளாகத்தில் உயிர்நீர்த்த மாணவர்களின் நினைவாக விமான குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தியுள்ளார்கள்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் செஞ்சோலை வளாகத்தில் கடந்த 14.08.2006 ஆம் ஆண்டு இலங்கைப்படையிரின் விமானத்தாக்குதலில் உயிரிழந்த 61 பாடசாலை மாணவர்களின் 13 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு இன்று நினைவிற்கொள்ளப்பட்டுள்ளது.
வடமாகாணசபை முன்னால் உறுப்பினர் ஆ.புவனேஸ்வரன் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் சி.குகநேசன் மற்றும் பொதுமக்கள் இணைந்து சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தியுள்ளார்கள்.
காலை 7.05 மணிக்கு செஞ்சோலை வளாகத்தில் அமைந்துள்ள ஒரு பகுதியில் இந்த வணக்க நிகழ்வினை நினைவிற்கொண்டுள்ளார்கள்.