இனப்படுகொலையாளர்களின் கூடாரமாகும் நல்லூர்!

breaking
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இனப்படுகொலையாளியும் சிறிலங்கா இராணுவத்தளபதியுமான மகேஸ் சேனநாயக்க வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்திற்குச் சென்றுள்ளார். இன்று (புதன்கிழமை) காலை அங்கு சென்ற அவர், விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார். இதன்போது சிறிலங்கா இராணுவத்தளபதியுடன் யாழ். மாவட்ட  சிறிலங்கா இராணுவ தளபதி உள்ளிட்ட இராணுவத்தினரும் ஆலய வழிபாட்டில் ஈடுபட்டனர். சிறிலங்கா இரானுவத் தளபதியின் வருகையை முன்னிட்டு ஆலயத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவர்களே ஆலயங்களுக்குள தஞ்சம்புகுந்திருந்த தமிழ் மக்கள் மீது தாக்குதல்களை தொடுத்து படுகொலை செய்தவர்கள் என்பது கடந்த கால வரலாறு.