இராணுவ சிப்பாய் தன்னைத்தானே சுட்டு தற்கொலை!

breaking
கொழும்பிலுள்ள சிறிலங்கா இராணுவ தலைமையகத்தில் கடமையிலிருந்த இராணுவ சிப்பாய் ஒருவர் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் இன்று (புதன்கிழமை) அதிகாலை இடம்பெற்றுள்ளது. குறித்த இராணுவ சிப்பாய் தனது கடமை நேர துப்பாக்கியில் தன்னைத்தானே சுட்டு இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார். பொலன்னறுவை பகுதியை சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார். குறித்த  சிறிலங்கா இராணுவவீரர் இராணுவ தலைமையகத்தின் பொறியியல் பிரிவை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பாக புறக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.