செட்டிகுளத்தில் சிங்கள குடியேற்றங்களால் தமிழர் நிலம் பறிபோகும் அபாயம்.!

breaking
செட்டிகுளம் பிரதேச எல்லைப்பகுதியை காப்பாற்றுவோம்! ஒரு பக்கம் கப்பாச்சி வௌவாளை காட்டு பகுதி சிங்கள மக்களால் அழிக்கப்பட்டு பயிர்செய்கை என்றபோர்வையில் நில ஆக்கிரமிப்பு நடைபெறுகிறது. மறுபக்கம் முசல்குத்தியில் எமது மக்கள் வாழ்ந்த நிலபுலங்கள் வில்பத்து சரணாலயத்திற்கு உரிய இடம் என வன பரிபாலனத் திணைக்களம் (Forest) பிரிவினரும், வனவிலங்குகள் காட்டுபகுதியினரும் உரிமை கோரிவருகின்றனர். எமது மக்கள் அங்கு செல்லமுடியாத நிலை உருவாகிவருகிறது. எமது பிரதேச நிலம் எங்கே? உடனடியாக தடுத்து நிறுத்த முன்வாருங்கள் என கௌரவ பிரதேச சபையின் கவனத்திற்கு கொண்டுவருவதாக  யூட் குறிப்பிட்டார்