தமிழரின் நூலகத்தை எரித்தவர்கள் இன்று நல்லூர் கந்தனிடம் அபயம்!

breaking
வடதமிழீழத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா  பிரதமர் ரணில் விக்ரமசிங்க நல்லூர் ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். அதற்கமைய நல்லூர் ஆலயத்திற்கு இன்று (வியாழக்கிழமை) காலை சென்ற அவர், நல்லூர் ஆதீன கர்த்தாவுடன் சந்திப்பினை மேற்கொண்டார். அதன்பின்னர் நல்லூர் ஆலயத்தில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டார். அதனைத்தொடர்ந்து ஆதீனத்தில் இந்துமத தலைவர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டார். இந்த விஜயத்தின்போது சிறிலங்கா சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன, சிறிலங்கா கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் யாழ்ப்பாண மாநகரசபை முதல்வர், பிரதமரின் செயலாளர் சிவஞானசோதி, மாநகர ஆணையாளர், யாழ்ப்பாண பிரதேச செயலாளர் மற்றும் அரச அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர். தமிழ்மக்களின் அடையாளங்களை சிதைத்து தமிழ் மக்கள் மீது கட்டமைக்கப்பட்ட இனவழிப்பை புரிந்து வரும் சிறிலங்கா பிரதமர் இன்று நல்லூர் வந்திருப்பது அவர்களை மதத்தலைவர்கள் எனும் பெயரில் சிலர் வரவேற்றிருப்பதும் கவலையளிப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.