கோத்தபாயவுக்கு மட்டுமே எமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்பது தெரியும் .!

breaking
தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் ஊடக சந்திப்பு  நேற்று  புதன்கிழமை கிளிநொச்சியில் இடம்பெற்றது.இதன்போதே போராட்டத்தில் ஈடுபட்டுவரும் யோகராசா கனகரஞ்சினி கருத்து தெரிவிக்கையில் “ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக  இனப்படுகொலையாளன்  கோட்டாபய ராஜபக்ஷ களமிறங்கவுள்ளார். அவருக்கும் அவரது குடும்பத்தினருக்குமே எமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்பது தெரியும். எனவே எமது உறவுகள் தொடர்பான விடயங்களை வெளியிடவேண்டிய கடப்பாடு அவர்களுக்கு உண்டு என தெரிவித்தார் அத்துடன் யாரும் தேர்தலில் போட்டியிடலாம். ஆனால் எமது பிள்ளைகள், உறவுகள் தொடர்பாக உறுதியான வாக்குறுதி வழங்குபவர்களுக்கே நாம் வாக்களிப்போம்.மேலும் காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பாக தீர்வினை வழங்குவோம் என வாக்குறுதி அளிப்பவர்களுக்கே எமது வாக்கு என வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளனர்