பளையில் கஞ்சாவுடன் ஒருவர் கைது

breaking
  வட தமிழீழம்: யாழ்ப்பாணம் – பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாளையடி அம்மன் கோயில் பகுதியில் 8 கிலோ 700 கிராம் கஞ்சாவுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடற்படையின் புலனாய்வு துறைக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் அவர் நேற்று (புதன்கிழமை) இரவு கைது செய்யப்பட்டுள்ளார். உடுத்துறை பகுதியினை சேர்ந்த 36 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைபற்றப்பட்ட கஞ்சாவின் பெறுமதி 20 இலட்சம் ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் கைதான சந்தேகநபரை கிளிநொச்சி நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ள பொலிஸார், சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.