திருகோணமலையில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் பலி!

breaking
திருகோணமலை – கிண்ணியா, குறிஞ்சாங்கேணி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 5 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வேன் ஒன்று, திடீரென இயங்கி நகர்ந்ததால் வேனுக்கு அருகில் இருந்த சிறுவன் அதில் சிக்குண்டு உயிரிழந்துள்ளார். சடலம் கிண்ணியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் வேனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். கிண்ணியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.