முஸ்லீம் அமைச்சர்கள் மீது தாக்குதல் வேண்டாம் -மகிந்த!

breaking
ரிஷாத் பதியுதீன், ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட முஸ்லிம் அமைச்சர்களை இலக்காக கொண்டு மேற்கொள்ளப்படும்  தாக்குதல்களை உடனடியாக நிறுத்துமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்  அனைத்து பிரச்சார பிரிவுகளுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்  மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் மற்றும் விளம்பரத் துறையின் உயர் நிர்வாகிகள் ஆகியோருடன் நடந்த கூட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷ இந்த உத்தரவை பிறப்பித்தத்துடன், சமூக ஊடக ஆர்வலர்கள் குறித்து உன்னிப்பாக கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. ஏனெனில் சிங்கள வாக்காளர் தளம் ஏற்கனவே இரண்டு பெரிய கட்சிகளுக்கு இடையே தெளிவான கோடுடன் பிரிக்கப்பட்டுள்ளதுடன், இனவாதத்தைத் தூண்டுவதன் மூலம் பொதுஜன பெரமுனவிற்கு வெற்றிக்கொள்ளக்கூடிய எதுவும் இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.