அரவக்காட்டில் கொழும்பு குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் ஆர்ப்பாட்டம்

breaking
  ஶ்ரீலங்கா:கொழும்பு குப்பைகளை புத்தளம் அருவக்காட்டில் கொட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். புத்தளம் – மன்னார் பிரதான வீதியிலுள்ள பெரிய பள்ளிவாசலுக்கு முன்னால் இன்று (வெள்ளிக்கிழமை) இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சர்வ மதத் தலைவர்கள், புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களாக சனத் நிஷாந்த பெரேரா, அர்ந்திக்க பெர்னாந்து, பியந்த பெர்னாந்து, புத்தளம் நகர பிதா கே.ஏ.பாயிஸ், உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள், கிளீன் புத்தளம் அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். இதன்போது அரசுக்கு எதிராக பல்வேறு கோசங்கள் எழுப்பப்பட்டதுடன் பல்வேறு பதாதைகளையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.