ஆணைக்குழுவிற்கு அச்சுறுத்தல் விடுத்த அதுரலிய ரதன தேரர்!

breaking

நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரதன தேரர், தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

குருணாகல் பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு வழங்கப்பட்ட இடமாற்ற உத்தரவு தொடர்பில் ரதன தேரர் அழுத்தங்களை பிரயோகித்துள்ளார்.

இந்த அழுத்தம் காரணமாகவே உடனடியாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு இடமாற்ற உத்தரவினை ரத்து செய்துள்ளது.

நாடு முழுபதிலும் குழப்பங்களை விளைவிக்கப்படும் என அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த அச்சுறுத்தல்களை தடுக்கும் நோக்கில் இவ்வாறு இடமாற்ற உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.