ஐ.எஸ். உடன் தொடர்புடையவர்கள் எனக் கூறப்படும் 63 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு.!

breaking
ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 63 பேரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், எதிர்வரும் 30 திகதி வரை விளக்கமறியில் இவர்களை வைக்குமாறு  நேற்று (வெள்ளிக்கிழமை) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.றிஸ்வான் உத்தரவிட்டார். ஏப்ரல் குண்டுத் தாக்குதலை ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் சஹரான் தலைமையிலான பயங்கரவாதிகள் மேற்கொண்டனர். இந்த சம்பவத்தையடுத்து சஹரானின் ஊரான காத்தான்குடி பிரதேசத்தில் விசேட அதிரடிப் படையினர், இராணுவத்தினர், பொலிஸார்  இணைந்து சுற்றிவளைத்து தேடுதல் நடத்திபோது அந்த அமைப்புடன் தொடர்புடையவர்கள் என அப்பகுதியைச் சேர்ந்த 64 பேர் கைதாகினர். இதில் கைதுசெய்யப்பட்ட 64 பேரும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து அதில் ஒருவர் நீதிமன்ற பிணையில் வெளிவந்த நிலையில் ஏனைய 63 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டவர்களை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவர்களை எதிர்வரும் 30 திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.