காலி – கொழும்பு பிரதான வீதியை வழிமறித்து மஹிந்துருவ பிரதேச மக்கள் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாறு கோரியே அவர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
30 ஆண்டுகளுக்கும் மேலாக குடிநீர் பிரச்சினையால் தாம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எனினும் இதுவரையில் இந்த பிரச்சினைக்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என போராட்டக்காரர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
பிரதேச மக்களின் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.