பரசூட் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது கீழே விழுந்ததில் ஶ்ரீலங்கா இராணுவ விஷேட படைப்பிரிவின் வீரர் உயிரிழந்துள்ளார்.
இன்று (செவ்வாய்க்கிழமை) காலை, அம்பாறை- உகண விமானப்படை தளத்தில் நடைபெற்ற பயிற்சியின் போதே அவர் உயிரிழந்துள்ளார்.
பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, பரசூட் செயலிழந்தமையே விபத்துக்கு காரணமென இராணுவத்தினர் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் சம்பவத்தில் படுகாயமடைந்த அவரை, வைத்தியசாலையில் அனுமதித்தப்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.