இராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வாவை நியமித்த விடயத்தில், ஐரோப்பிய ஒன்றியம் ஒரு கூட்டு அறிக்கையின் மூலம் கவலை வெளியிட்டுள்ளது.
“ஐரோப்பிய ஒன்றியம் தனது அறிக்கையில், லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வாவின் பதவி உயர்வு நீதி மற்றும் பொறுப்புணர்வை உறுதி செய்வதற்காக இந்த ஆண்டு ஐ.நா மனித உரிமை கவுன்சிலுக்கு இலங்கையின் உறுதிப்பாட்டை கேள்விக்குட்படுத்தியுள்ளது.
கடுமையான மனித உரிமைகள் குற்றச்சாட்டுகள் மற்றும் அவருக்கு எதிரான மனிதாபிமான சட்ட மீறல்கள் காரணமாக இது தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் மைக்கேல் பேச்லெட் வெளிப்படுத்திய கவலைகளில் பகிர்ந்து கொண்டார்.
இந்த நியமனம் இலங்கை தேசிய நல்லிணக்கத்திற்கான முயற்சிகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது மற்றும் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தப்பிப்பிழைத்தவர்களுக்கும் ஒரு கவலையான செய்தியை அனுப்புகிறது” என்று ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, நோர்வே மற்றும் சுவிட்சர்லாந்து தூதரகங்கள் மற்றும் இங்கிலாந்து உயர் ஸ்தானிகராலயம் ஆகியவற்றுடன் ஒப்பத்துடன் வெளியாகிய அறிக்கையில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.