தாம் வெளி­யிட்ட அறிக்கை அமெ­ரிக்­காவின் நிலைப்­பாட்டை வெளிப்­ப­டுத்தும் நோக்­கி­லா­னது :அமெ­ரிக்க தூதுவர் அலய்னா டெப்லிட்ஸ்

breaking
  ஶ்ரீலங்கா இரா­ணுவத் தள­ப­தி­யாக லெப்.ஜெனரல் சவேந்­திர சில்வா நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது தொடர்­பாக தாம் வெளி­யிட்ட அறிக்கை அமெ­ரிக்­காவின் நிலைப்­பாட்டை வெளிப்­ப­டுத்தும் நோக்­கி­லா­னது என்று இலங்­கைக்­கான அமெ­ரிக்க தூதுவர் அலய்னா டெப்லிட்ஸ் தெரி­வித்­துள்ளார். அமெ­ரிக்க தூதுவர் கொழும்பில் தனது இல்­லத்தில் நேற்று சில ஊட­க­வி­ய­லா­ளர்­களைச் சந்­தித்துப் பேசினார். இதன்­போது, இரா­ணுவத் தள­ப­தி­யாக லெப்.ஜெனரல் சவேந்­திர சில்வா நிய­மிக்­கப்­பட்­ட­தற்கு கவலை தெரி­வித்து அமெ­ரிக்க தூத­ரகம் வெளி­யிட்ட அறிக்கை குறித்து கேள்வி எழுப்­பப்­பட்­டது. அதற்கு அமெ­ரிக்க தூதுவர், பதி­ல­ளிக்கும் போது, “ இது எனது நாட்டின் நிலைப்­பாட்டை வெளிப்­ப­டுத்­து­வது மட்­டு­மே­யாகும். ஒரு நாட்­டுக்கு என்ன செய்ய வேண்டும் என்று கூறு­வ­தற்கும், அதன் செயல்கள் குறித்து கவலை தெரி­விப்­ப­தற்கும் இடையில் வித்­தி­யாசம் உள்­ளது. அமெ­ரிக்­காவின் கொள்கைகளையும் முடிவுகளையும் பகிர்ந்து கொள்வதே எனது கடமை” என்று அவர் கூறினார்.