திட்டமிடல் இல்லாமலேயே வடதமிழீழ பகுதியில் வீட்டுத்திட்டங்கள் அமைக்கப்படுகின்றன சாள்ஸ் நிர்மலநாதன் குற்றச்சாட்டு

breaking
  வடதமிழீழத்தில் எந்த திட்டமிடலும் இல்லாமலேயே வீட்டுத்திட்டங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. மக்கள் தங்கள் நகைகளை அடகுவைத்தே வீட்டின் மிகுதி பகுதியை அமைக்கும் நிலை ஏற்பட்டிருக்கின்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். ஶ்ரீலங்கா பாராளுமன்றத்தில் இன்று மக்கள் வங்கி(திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், ஶ்ரீலங்கா அமைச்சர் சஜித் பிரேமதாசவினால் வடக்கில் மாதிரி கிராம வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அதிகமான வீட்டுத்திட்டங்களை ஆரம்பிக்க வேண்டுமென்று பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. எவ்வாறாயினும் வீடுகள் வழங்கப்படுகின்ற போதும் அந்த மக்களுக்கான நிதி வழங்கப்படாதிருக்கின்றன. அவரால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டம் சரியாக முன்னெடுக்கப்படுவதாக தெரியவில்லை. மக்கள் கடன்பட்டும் நகைகளை அடகு வைத்தே வீட்டின் மிகுதி பகுதியை அமைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்றார்.