ஸ்ரீலங்கா படை புலனாய்வு பிரிவு மறுசீரமைக்கப்படும்-சவீந்திர சில்வா!

breaking
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஏற்படக்கூடிய நிலைமைகளுக்கும் முகம் கொடுக்கும் வகையில் இராணுவ புலனாய்பு பிரிவு மறுசீர மைக்கப்பட்டு அதன் செயற்பாடுகள் மேலும் சிறப்பாக முன்னெடுக்க தேவையான உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுமென புதிய இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இந்த மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் போது சர்வதேச ரீதியில் இராணுவம் பயன்படுத்தும் முறைமைகளை ஆராய்ந்து அதன் அனுபவங்களை எமது இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு பெற்றுக் கொடுப்பது தொடர்பில் தான் கூடுதல் கவனம் செலுத்தவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இலங்கையின் 23ஆவது இராணுவத் தளபதியாக கடந்த 19ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா நேற்று முன்தினம் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். இதன் பின்னர் முதற்தடவையாக தனது கையொப்பமிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்துள்ளார்