பல்கலைக்கழக விடுதிக்குள் மாணவனின் உடலம் மீட்பு!

breaking
தென்கிழக்கு பல்கலைக்கழக விடுதிக்குள் மாணவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று காலை மாணவரின் சடலம் மீட்கப்பட்டதாக பொலீஸ் அறிவித்துள்ளது. நுவரெலியா – பூண்டுலோயா பகுதியை சேர்ந்த கணேஷ்வரன் துர்கேஷ்வரன் என்ற 24 வயதான இளைஞரே உயிரிழந்துள்ளார். தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியில் பீடத்தில் மூன்றாம் வருடத்தில் இந்த மாணவர் கல்வி கற்பதாக தெரியவந்துள்ளது உயிரிழந்த மாணவரின் சடலம் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அக்கரைப்பற்று பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.