வைத்தியர் சிவரூபனை வைத்து விளையாட்டு காட்டும் ஶ்ரீலங்கா காவல்துறை

breaking
பிரமுகர்கள் படுகொலை சதித் திட்டத்தை சட்ட வைத்திய அதிகாரி சி.சிவரூபன் ஒப்புக்கொள்ளவில்லை என்று பொலிஸார் இன்று (29) சற்றுமுன் அறிவித்துள்ளனர். வைத்தியர் சிவரூபன் உட்பட அவருடன் தொடர்புள்ளதாக கைது செய்யப்பட்டவர்கள் கோத்தாபாய ராஜபக்க மற்றும் மஹிந்த ராஜபக்ச உள்ளிட்டோரை படுகொலை செய்யத் திட்டமிட்டனர் என்று பொலிஸ் தலைமையகத்தின் பெயரில் போலியான அறிக்கை ஒன்று இன்று வெளியாகியிருந்தது. குறித்த அறிக்கை போலியானது எனத் தெரிவித்த பொலிஸார், அவ்வாறு கொலைச்சதியை சிவரூபன் ஒத்துக்கொள்ளவில்லை எனவும் அறிவித்துள்ளனர்.