மக்களை காக்க தனது படகினை தகர்த்து வீரச்சாவினைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் குமரவேல்.!(காணொளி இணைப்பு)

breaking

01.09.2001 அன்று யாழ். மாவட்டம் பருத்தித்துறைக் கடற்பரப்பில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சிறிலங்கா கடற்படையின் நீரூந்து விசைப்படகு மீது ஊடுருவி மேற்கொண்ட தாக்குதல் முயற்சியின்போது வீரச்சனைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் குமரவேல் / மதி ஆகிய கடற்கரும்புலி மாவீரரின் 18ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

யாழ். பருத்தித்துறைக் கடற்பரப்பில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் சிறிலங்கா கடற்படையின் நீரூந்து விசைப்படகு ஒன்றினைத் தாக்கியழிக்கும் நடவடிக்கைக்கு சென்றவேளை தேசத்துரோகி ஒருவரின் காட்டிக்கொடுப்பினால் தாக்குதல் திட்டத்தினை ஊகித்துக் கொண்ட சிறிலங்கா கடற்படையினர் அப்பகுதியில் தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பொது மக்களை தமது படகில் ஏற்றியிருப்பதை தெரிந்து கொண்டு, மக்கக்களிற்கு பாதிப்பு ஏற்படாதவகையில் மக்களைக் காத்து கடற்படைப் படகிற்கு தொலைவாக வைத்து தனது படகினை தகர்த்து வீரச்சாவினைத் தழுவிக்கொண்டார் கடற்கரும்புலி மேஜர் குமரவேல்.

கடற்கரும்புலி மேஜர் குமாரவேல் உணர்வின் காவியம்