போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் சிறையில் உள்ள கணவனுக்கு போதைப்பொருள் கொண்டுசென்ற பெண் கைது

breaking
  வடதமிழீழம்: வவுனியா சி றைச்சாலைக்கு ஐஸ் போ தைப்பொ ருளை எடுத்துச்சென்ற பெண் ஒருவரை வவுனியா பொலிஸார் நேற்று மதியம் 1 மணியளவில் கைது செய்துள்ளனர். போ தைப்பொ ருளை தம்வசம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் குறித்த பெண்ணின் கணவர் வவுனியா சிறைச்சாலையில் சிறைவாசம் அனுபவித்து வருகின்றார். இந்த நிலையில் சிறைச்சாலையிலுள்ள கணவரை பார்வையிடுவதற்காக இன்று மதியம் குறித்த பெண் சி றைச்சாலைக்கு சென்றுள்ளார். சி றைச்சாலைக்கு சென்ற சமயத்தில் ஆடையினுள் 4கிராம் ஐஸ் போதைப்பொருளை வைத்து கணவருக்கு வழங்க முற்பட்ட சமயத்தில் சி றைச்சாலை பொலிஸார் குறித்த பெண்ணை கைது செய்து வவுனியா போ தைப்பொ ருள் த டுப்பு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். வவுனியா போதைப் பொருள் தடுப்பு பொலிஸார் குறித்த பெண்ணையும் போ தைப்பொரு ளையும் இன்று மாலை வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய சமயத்தில் குறித்த பெண்ணை இன்றிலிருந்து இரு வாரங்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். Share 0Tweet 0