மட்டக்களப்பில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலி

breaking
  தென்தமிழீழம்: மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதி செட்டிபாளையத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பிலிருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை கல்முனை நோக்கிச் சென்ற லொறியும் கல்முனையில் இருந்து மட்டக்களப்பை நோக்கி பயணித்த பட்டாரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் காவத்தைமுனை, பனிச்சையடி வீதியை அண்டி வசிக்கும் அலியார் நூர்ஜஹான் (வயது 46) என்பவரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பாக களுவாஞ்சிக்குடி போக்குவரத்துப் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.