காட்டுத்தீயினால் 100 ஏக்கர் காட்டுபகுதி தீக்கிரை .!

breaking
வெல்லவாய பிரதேச செயலகத்திற்குட்பட்ட மல்வத்த காட்டுப்பகுதியில் நேற்று (08) மதியம் ஏற்பட்ட காட்டுத்தீயை சிங்கள இராணுவத்தினர் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். நேற்று மதியம் ஏற்பட்ட காட்டுத்தீ வேகமாகப்பரவியதால் சுமார் 100 ஏக்கர் காட்டுபகுதி முழுமையாக தீக்கிரையாகியுள்ளது. பின்னர் மொனராகல இடர் முகாமைத்துவ பிரிவு  அறிவித்ததையடுத்து அப்பகுதிக்கு வருகை தந்த சிங்கள இராணுவத்தினர் தீயினை கட்டுப்பாட்டிற்கள் கொண்டு வந்துள்ளனர். வறட்சியாளன காலநிலை மற்றும் காற்று நிலமை காரணமாக தீயினை கட்டுப்பாடுத்த சிரமம் ஏற்பட்டதாகவும் யாராவது ஒருவரினால் காட்டுப்பகுதியை தீ வைத்திருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் வெல்லவாய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.