புதுக்குடியிருப்பு- மந்துவில் பகுதியில் சிறிலங்கா படையினா் மீது இளைஞா் குழு ஒன்று நேற்று இரவு தாக்குதல் நடாத்திவிட்டு தப்பி சென்ற நிலையில் இன்றைய தினம் இளைஞா் ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளாா்.
சிறிலங்கா இராணுவ முகாம் வீதியால் சென்ற இளைஞா் குழு அங்கிருந்த சிறிலங்கா இராணுவ சிப்பாய்களை மூா்க்கத்தனமாக தாக்கியுள்ளது.
இதனையடுத்து தாக்குதலுக்கு இலக்கான சிறிலங்கா படையினா் புதுக்குடியிருப்பு சிறிலங்கா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளனா். இந்த முறைப்பாட்டுக்க அமைவாக இன்றைய தினம் காலை
விசேட தேடுதல் நடவடிக்கையில் இறங்கிய சிறிலங்கா பொலிஸாா் புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் பகுதியை சோ்ந்த இளைஞா் ஒருவரை சந்தேகத்தின் பெயாில் கைது செய்துள்ளனா்.