நீதிமன்றில் சரணடைந்த பாதாள உலகக்குழு உறுப்பினரான புளுமெண்டல் சங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நீதிமன்றில் இன்று சரணடைந்த புளுமெண்டல் சங்க என்று அழைக்கப்படும் சங்க சிரந்த என்ற பாதாள உலகக்குழு உறுப்பினரே நீதிமன்றில் சரணடைந்ததைத் தொடர்ந்து இம்மாதம் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
புளுமெண்டல் சங்கா நேற்றிரவு இந்தியாவில் இருந்து நாடு திரும்பியமை குறிப்பிடத்தக்கது.