வாளோடு வந்து வலைச் சுருட்டிய ரௌடிகள்: வவுனியாவில் சம்பவம்

breaking
வடதமிழீழம்: வவுனியா மதவுவைத்தகுளம் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றினுள் வாளுடன் புகுந்து தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்த மூன்று ரௌடிகளை அப்பகுதி மக்கள் மடக்கிப்பிடித்துள்ளனர். இன்று (11) புதன்கிழமை காலை 7.30 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இன்று காலையில் வீதியில் சென்று கொண்டிருந்த ஒருவருக்கும், சில ரௌடிகளிற்குமிடையில் சிறு வாய்த்தர்க்கம் இடம்பெற்றுள்ளது. அதன் பின்னர் இரு தரப்பும் அவ்விடத்திலிருந்து அகன்று சென்றுள்ளனர். பின்னர் தம்முடன் முரண்பட்டவரின் வீட்டுக்கு முச்சக்கரவண்டியில் வாளுடன் சென்ற மூன்று ரௌடிகள், வீட்டாரை வெளியே வரவழைத்து தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்துள்ளனர். எனினும் இவ் தாக்குதல் சம்பவம் அயவர்களினால் முறியடிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்த மூன்று ரௌடிகளை அயலவர்களும் கிராம இளைஞர்களும் இணைந்து மடக்கிப்பிடித்து, நையப்புடைத்து வீட்டுக்குள் அடைத்து வைத்து 119 பொலிஸாருக்கு தகவல் வழங்கினார்கள் . எனினும் மூன்று மணிநேரம் கடந்தும் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வரவில்லை. அதன் பின்னர் கிராம பொது அமைப்புக்கள் இரு தரப்பினருடனும் கலந்துரையாடி இணக்கத்திற்கு வந்து ரௌடிகள் கொண்டு வந்த வாளை பொது அமைப்புக்கள் தம்வசப்படுத்தினார்கள். இனி எவ்வாறான சட்டவிரோத செயல்களில் ஈடுபடமாட்டோம் என கிராம பொது அமைப்புக்கள் மற்றும் அயலவர்கள் முன்னிலையில் மூன்று ரௌடிகளும் தெரிவித்தமையினையடுத்து அவர்கள் பொதுமக்களினால் விடுவிக்கப்பட்டனர்.