கஞ்சிபானை இம்ரானின் தந்தை, சகோதரன் உள்ளிட்ட ஆறு பேர் கைது.!

breaking
போதைப்பொருள் வர்த்தக குற்றச்சாட்டில் கைதாகி விளக்கமறியலில் உள்ள கஞ்சிபானை இம்ரானின் தந்தை, சகோதரன் உள்ளிட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார். கஞ்சிபானை இம்ரானுக்கு சாப்பாட்டுப் பொதியில் கைப்பேசி ஒன்றினை மறைத்து வைத்து கொடுக்க முற்பட்ட சம்பவம் தொடர்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.