தமிழர்களிற்கு இன்னும் விடுதலை கிடைக்கவில்லை:  மேடையில் மட்டும் கோசம் போடும் மாவை 

breaking
  இலங்கையில் போர்குற்றங்களை இழைத்தவர்கள் இன்று உயர் பதவிகளிலும் இருக்கின்றார்கள் ஆனால் தமிழர்களுக்கான விடுதலை இதுவரை கிடைக்கவில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார் கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் உப அலுவலகத்தின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் தமிழ் மக்கள் கடந்த 70 வருடங்களுக்கு மேலாக தங்களது உரிமைக்களுக்காக போராடி வருகின்றார்கள் அந்த கொள்கையின்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கான ஆதரவை வழங்கி வருகின்றனர் அதாவது மக்களுடைய சுயநிர்ணய உரிமை அவர்களுடைய விடுதலை என்பவற்றை வலியுறுத்தி நாங்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றோம் அந்த வகையில் மக்கள் தங்களுக்கான ஆதரவை வழங்கி வருகின்றார்கள் நாங்களும் எங்களுடைய கொள்கைக்காக குரல் கொடுத்து வருகிறோம் எமது மக்களைக் கொன்று குவித்து பெரும் மனிதப் படுகொலைகளை செய்தவர்கள் இன்று உயர் பதவிகளை வகிக்கின்றார்கள் ஜனாதிபதியாக வருவதற்கு போட்டியிடுகின்றார்கள் ஆனால் நமது மக்களுக்கு அடிப்படை உரிமைகள் கூட இதுவரை வழங்கப்படவில்லை அதற்காக நாங்கள் குரல் கொடுத்து வருகின்றோம் கடந்த காலங்களில் தேர்தலின் போதும் நாங்கள் இந்த மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நாங்கள் நிறைவேற்றி வருகிறோம் அதேநேரம் இந்த எமது உரிமைகளை பெற்றுக் கொள்வதற்காகவும் ஒரு தன்னாட்சியுடன் வாழக்கூடிய ஒரு அதிகாரத்திற்காகவும் நாங்கள் போராடி வருகின்றோம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்