பேரனும் தகப்பனும் எடுத்துச் சென்ற தாயின் சடலம் கிணற்றிலிருந்து மீட்பு

breaking
  ஹட்டன் வட்டவலை விக்டன் தோட்டபகுதியில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு தாயின் சடலத்தை மகனும் பேரனும் முச்சக்கர வண்டியில் ஏற்றி செல்லப்பட்டதாக கூறப்பட்ட தாயின் சடலம் இன்று வெள்ளிகிழமை அவர்களது வீட்டிடு கிணற்றிலிருந்து மீட்கபட்டதாக வட்டவலை பொலிஸார் தெரிவித்தனர். இதையடுத்து குறித்த தாயின் சடலம் ஹட்டன் நீதிமன்ற பதில் நீதவான் சஞ்சிவ பொன்சேக்க தலைமையில் விசாரனைகள் மேற்கொண்டு சடலம் மீட்கபட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 70 வயதுடைய ராகை என்ற தாயை கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு அறை ஒன்றில் வைத்து மகன் மருமகள் பேரன் ஆகிய மூவரும் இனைந்து தடியால் தாக்கி வாய் மற்றும் கைகள் கட்டபட்ட நிலையில் வீட்டின் பின்புறத்தில் உள்ள கினறு ஒன்றில் புதைக்கபட்டு மகனும் 13வயது பேரனும் தலைமறைவாகியிருந்தனர். இன் நிலையின் விசாரனைகளை மேற்கொண்ட பொலிஸார் குறித்த மூதாட்டியின் இரண்டாவது பேரனான கோபால கிருஸ்னண் வயது 08 பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமுலத்தில், தனது பாட்டியை தனது தந்தை மற்றும் அண்ணன் தடியால் அடித்தாகவும் இதன்போது பாட்டியின் கண்களில் இருந்து இரத்தம் வந்ததாகவும் பின்னர் தனது பாட்டியை பொதி ஒன்றில் கட்டி தந்தை எடுத்துச் சென்றதாகவும் தெரிவித்துள்ளான். இதையடுத்து முதலில் பிரதான சந்தேக நபரின் மனைவியை கைது செய்து விசாரனைகளை மேற்கொண்டபோது நேற்று இரவு மகனும் மற்றுமொரு பேரனும் கைது செய்யபட்டதாக பொலிஸாரின் ஆரம்பகட்டவிசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.. சம்பவத்தில் மகன் தாய் பேரபிள்ளை உட்பட மூன்று பேர் கைது செய்யபட்டுள்ளதோடு சடலம் சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனை அறிக்கை பெரவதற்காக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கபட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர் இதே வேலை சம்பவ இடத்திற்கு சந்தேக நபரை அழைத்து வந்த போது தோட்டமக்கள் இனைந்து குறித்த நபரை தாக்க முற்பட்ட போதும் பொலிஸார் மக்களை கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்தனர் சந்தேக நபர்கள் மூன்றுபேரும் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலை படுத்துவதற்கான நடவடிக்கையினை வட்டவலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது