வடதமிழீழம்: யாழ். மத்திய பேருந்து நிலையத்திலுள்ள இரு கடை உரிமையாளர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் 3 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை இடம்பெற்றுள்ளது.
யாழ். நகரிலுள்ள இரு கடைகளின் உரிமையாளர்களுக்கிடையில் முரண்பாடுகள் இருந்துள்ளன. குறித்த முரண்பாடு வலுவடைந்த நிலையில் இரு தரப்பினரும் கூரிய ஆயுதங்களுடன் மோதலில் ஈடுபட்டனர்.
இந்த மோதலில் 3 இளைஞர்கள் கத்திக் குத்துக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மோதல் சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.