தடைகளை தாண்டியும் சிறப்புற நடந்து முடிந்த வெடுக்குநாரி ஆதி இலிங்கேஸ்வரரின் இறுதி நாள் பூசை

breaking
  வடதமிழீழம்: நெடுங்கேணி வெடுக்குநாரி ஆதி இலிங்கேஸ்வரர் ஆலய பொங்கல் விழாவின் இறுதிநாள் இன்று சிறப்பாக நடந்து முடிந்தது. பல்வேறு பகுதிகளிலுமிருந்து பொங்கல் விழாவிற்கு பெருமளவானவர்கள் வந்திருந்தனர். ஆலய வழிபாட்டிற்கு தடை ஏற்படுத்தப்பட்ட போதிலும், அவற்றை மீறி இம்முறை பொங்கல் விழா சிறப்பாக இடம்பெற்று முடிந்தது. கடந்த 4ஆம் திகதி ஆரம்பமாகிய வருடாந்த பொங்கல் விழா தொடர்ச்சியாக 9 நாட்கள் நடைபெற்று இன்றுடன் நிறைவு பெற்றுள்ளது. இந்நிலையில் இன்றையதினம் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதுடன், ஒலுமடு பிள்ளையார் ஆலயத்தில் இருந்து காவடிகள் வந்திருந்தன. இந்நிலையில் இன்று அதிகாலை மடப்பண்டம் எடுக்கும் நிகழ்வு இடம்பெற்று அதிகாலை சூரியன் உதிப்பதற்கு முன்னர் பொங்கல் பொங்கி நிகழ்வுகள் அனைத்தும் நிறைவு பெற்றுள்ளது. நெடுங்கேணி வெடுக்குநாரி ஆதிலிங்கேஸ்வரர் பொங்கல் விழா- முழுமையான படத்தொகுப்பை பார்க்க இங்கு அழுத்துங்கள் இன்றைய இறுதி நாள் பூஜை நிகழ்வில் பெருமளவான பொதுமக்கள், மற்றும் யாழ் பல்கலைகழக மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர். நெடுங்கேணி வெடுக்குநாரி மலை மற்றும் அதனை அண்டிய பகுதிகள் தொல்பொருள் திணைக்களத்திற்கு சொந்தமானது என தெரிவித்து ஆலயத்தில் பொதுமக்கள் வழிபடுவதற்கு தடை ஏற்படுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. எனினும், பொதுமக்களின் விடாமுயற்சியால் வழிபடுவதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கபட்டிருந்தது. எனினும், ஆலய வளாகத்தில் கட்டுமானங்களை மேற்கொள்ள தொல்பொருள் திணைக்களம் மற்றும் பொலிசாரால் விதிக்கப்பட்ட தடை தொடர்வது குறிப்பிடத்தக்கது.