கோவையில் பாகிஸ்தானுடன் தொடர்புடைய வங்கதேச இளைஞரிடம் போலீசார் விசாரணை.!

breaking
கோவையில்  நகைப்பட்டறையில் வேலை பார்த்து வந்த பாரூக் கவுசீர் என்ற வங்கதேசத்தை சேர்ந்த இளைஞரிடம் கோவை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது செய்யப்பட்டுள்ள பாரூக் கவுசீர் பாகிஸ்தானில் உள்ள வாட்ஸ் அப் குழுக்களில் இணைந்து தீவிரமாக செயல்பட்டு இயக்குவது குறித்து ஆலோசித்து வந்ததாக, வந்த தகவலின் அடிப்படையில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
துப்பாக்கி தொடர்பான தகவல்களை பரிமாறியதாகவும் போலீஸ் விசாரணையில் கூறப்படுகிறது. செல்போனை பழுதுபார்க்க எடுத்துச் சென்றபோது  பாரூக் கவுசீர் போலீசாரிடம் சிக்கினார்.