சிங்கள சிப்பாய் பெண்ணின் சங்கிலியை அறுத்து தப்பி ஓட்டம்.!

breaking
வட   தமிழீழம் , யாழ்.சுன்னாகதில் வீடொன்றுக்குள் புகுந்த சிங்கள இராணுவ சிப்பாய் ஒருவர் அங்கிருந்த பெண் ஒருவாின் சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பி ஓட முயற்சித்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளாா்.   இராணுவத்தில் பணியாற்றும் புன்னாலைக்கட்டுவனைச் சேர்ந்தவரே இராணுவ சிப்பாயே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சிங்கள  பொலிஸார் வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவேளை சங்கிலியை அறுத்துத்கொண்டு தப்பிக்க முயன்ற சிப்பாய் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் கைது செய்யப்பட்ட சிப்பாயிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் இராணுவ சிப்பாய் அபகரித்தது சென்றது கவரிங் சங்கிலி என்றபோதும் சந்தேகநபர் வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவரா என்பது தொடர்பில் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். இதேவேளை சுன்னாகம், மானிப்பாய் மற்றும் அச்சுவேலிப் பொலிஸ் பிரிவுகளில் அண்மைக்கால இடம்பெறும் வழிப்பறிக் கொள்ளைச் சம்பவங்களுடன் இராணுவத்தில் பணியாற்றும் மூவர் சம்பந்தப்பட்டுள்ளதாக பரவலாகப் பேசப்பட்டு வந்த இன்று ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.