எழுக தமிழ்: போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்காத மன்னார் வவுனியா

breaking
எழுக தமிழ் நிகழ்வு தமிழ் மக்கள் பேரவையால் யாழ்ப்பாணத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட நிலையில் கதவடைப்பு போராட்டத்திற்கும் பேரவையால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களில் அனைத்து பிரதேசங்களிலும் வர்த்தக நிலையங்கள் வழமைபோன்று திறக்கப்பட்டு வியாபார நடவடிக்கைகள் இடம்பெற்றிருந்தன இதன்போது, வவுனியா வர்த்தக நலன்புரிச்சங்கம் கடையடைப்புக்கு ஆதரவு தெரிவிக்க முடியாது என தெரிவித்த நிலையில் இன்று வழமைபோன்று கடைகள் திறக்கப்பட்டு வியாபார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதேவேளை பாடசாலைகள் மற்றும் அரச திணைக்களங்களும் வழங்மைபோன்று இடம்பெற்று வருகின்றது. போக்குவரத்து சேவைகள் தங்கு தடையின்று இடம்பெறுகின்ற நிலையிலும் வவுனியாவிலிருந்து விசேட பேரூந்துகள் எழுக தமிழ் நிகழ்வுக்கு மக்களை அழைத்து சென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இதேவேளை வவுனியா நகர்ப்பகுதியில் மக்கள் நடமாட்டம் வழமைக்கு மாறாக குறைந்தே காணப்படுகின்றது. இதையடுத்து மன்னாரின் இயல்பு நிலைமையும் வழமை போல் காணப்பட்டது. .மன்னார் பஸார் பகுதியில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் வழமை போல் இயங்கியது.தனியார் போக்குவரத்துச் சேவைகள் வழமை போல் இடம் பெற்று வருகின்றது. பாடசாலைகள்,அரச,தனியார் நிறுவனங்களின் செயற்பாடுகள் வழமை போல் இடம் பெற்று வருகின்றது.ஒரு சில வர்த்தக நிலையங்கள் மாத்திரமே மூடப்பட்டுள்ளது. மன்னார் இதே வேளை எழுக தமிழ் நிகழ்விற்கு ஆதரவு வழங்கும் வகையில் மன்னார் மாவட்டத்தில் உள்ள அரசியல் சிவில் சமூக பிரதிநிதிகள் பலர் நேரடியாக கண்டன போரட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். இதே வேளை இலங்கை அரச போக்குவரத்துச் ஊழியர்களுக்கு சம்பள சுற்றறிக்கையின் படி புதிய சம்பள முறை துரிதமாக நடைமுறைப்படுத்த கட்டாயப்படுத்தி இலங்கை அரச போக்குவரத்துச் சபை ஊழியர்கள் இன்று திங்கட்கிழமை (16) தொடக்கம் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். குறித்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்கி இலங்கை அரச போக்குவரத்துச் சபையின் மன்னார் சாலை ஊழியர்களும் இன்றைய தினம் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இன்றைய தினம் மன்னாரில் இருந்து உள்ளக மற்றும் வெளி மாவட்டங்களுக்கான அரச போக்குவரத்து சேவைகள் இடம் பெறவில்லை. எனினும் மக்கள் எவ்வித அசௌகரியங்களும் இன்றி தனியார் போக்குவரத்துச் சேவையூடாக தமது பயணங்களை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.