முள்ளிவாய்க்காலில் தமிழீழ தேசிய கொடிகள், சீருடைகள்!

breaking

வட தமிழீழம் முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில், இன்று காலை, பொதி செய்யப்பட்டு, புதைக்கபட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடிகள், சீரூடைகள் மீட்கப்பட்டுள்ளன.

முள்ளிவாய்க்கால் பகுதியில், ஒருவர் தனது காணியை கனரக இயந்திரம் கொண்டு துப்புரவு செய்த போது, நிலத்தில் புதைந்திருந்த நிலையில் காணப்பட்ட பையை எடுத்து பார்த்தபோது, அதில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சீருடைகள் இருந்துள்ளன.

இது தொர்பில், காணி உரிமையாளர் முல்லைத்தீவு பொலிஸாருக்கு தகவல் கொடுத்ததையடுத்து, அங்கு விரைந்த பொலிஸார், தமிழீழ விடுதலைப் புலிகளின் இரண்டு  கொடிகளையும் 2 வரி சீருடைகளையும் இரண்டு தொப்பிகளையும் மீட்டுள்ளனர்.