தெமட்டகொடு பகுதியில் அடுக்கு மாடி கட்டடத்தில் தீ விபத்தால் பதற்றம்!

breaking
தெமட்டகொட பகுதியில் உள்ள அடுக்குமாடிக் கட்டடம் ஒன்றில் சற்றுமுன்னர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு கொழும்பு தீயணைப்பு படையின் பல வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளன என தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது. மேலும் குறித்த தீவிபத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.