மாட்டுடன் மோட்டார் சைக்கிளில் சென்று மோதியவர் பலி

breaking
வடதமிழீழம்: முல்லைத்தீவு - அளம்பில் பகுதியில் நேற்று, இரவு 08.00 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்தவர் மாட்டுடன் மோதியல் ஏற்பட்ட விபத்தில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த விபத்தில் மோட்டார் சைக்களில் பயணித்த தண்ணீரூற்று ஹிச்சிராபுரம் பகுதியைச் சேர்ந்த, நான்கு பிள்ளைகளின் தந்தையாரான, 44 வயதினையுடைய காங்கேசன் குருபரன் என்பவர் விபத்து இடம்பெற்ற இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரவிக்கப்பட்டுள்ளது. மேலும் விபத்தில் உயிரிளந்தவருடைய, உடல் பிரேத பரிசோதனைக்காக மாஞ்சோலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு போலீஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.