நீராவியடி குருகந்த ரஜமஹா விகாரை வளாகத்திற்குள் பௌத்த பிக்குவின் உடலம்!

breaking
கொழும்பு மேதாலங்கார  கீர்த்தி என்ற  பௌத்த பிக்கு புற்றுநோய் காரணமாக 21.09.19 அன்று மகரகம வைத்தியசாலையில்  மரணமடைந்துள்ளார்  இவரின் உடலம் 22.09.19 அன்று முல்லதைத்தீவு செம்மலைப்பகுதியில் அமைந்துள்ள நீராவியடி குருகந்த ராஜமஹா விகாரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இன்னிலையில் குறித்த பகுதியில் பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ளதால்  பௌத்த தேரரின் உடலினை கொண்டுவரவேண்டாம் என்றும் இதனால் பிரச்சனைகள் ஏற்படும் என்றும் ஆலய நிர்வாகத்தினரால்  முல்லைத்தீவு பொலீசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது
விகாரைக்கு கொண்டுவந்து இறுதிக்கிரியை மேற்கொள்ளும் முயற்சிக்கு தடைகோரி பிள்ளையார் ஆலய நிர்வாகத்தினர் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் 21.09.19 மாலை முறைப்பாடு செய்தனர்.
இதனையடுத்து பதில் நீதவானிடம் பொலிஸார் தடைகோரி விண்ணம் செய்த நிலையில் ஆலய வளவில் சடலத்தை எரியூட்டுவதற்கு மட்டும் பதில் நீதவானால் தடை விதிக்கப்பட்டுள்ளது
ஆனால் ஆலய சூழலுக்கு சடலம் கொண்டுவர அனுமதிக்க முடியாது என பிள்ளையார் ஆலய தரப்பினர் ஆதங்கம் வெளியிட்டுவரும் நிலையில் விகாரை வளாகத்திற்குள் இன்று அதிகாலை 2.00 மணியளவில் உடலம் கொண்டுவரப்பட்டுள்ளது
இதானல் இரு தரப்பிற்கும் இடையில் முறுகல் நிலை ஏற்படலாம் என அங்கு அதிகளவான பொலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இன்னிலையில் குறித்த தேரரின் உடலத்தினை எரிப்பதற்காக வேறு இடம் ஒன்றினை தெரிவுசெய்யும் நடவடிக்கையில் தொல்பொருள் திணைக்களத்தினர் ஈடுபட்டுள்ளார்கள் நாளை 23.09.19 அன்று குறித்த தேரரின் உடலம் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஏதே ஒருபகுதியில் எரியூட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது